“அஜித் சார் விருப்பப்பட்டால் நிச்சயம் செய்வேன்” – படம் தயாரிப்பது குறித்து சிவகார்த்திகேயன் பதில்!
மதுரை: மதுரையில் ‘தாய்க்கிழவி’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “எதிர்காலத்தில் நடிகர் அஜித்தை வைத்து படம் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறதா?” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், தற்போது தான் ஒரு சிறிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் சிறிய அளவிலான படங்களையே தயாரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது நிறுவனம் எதிர்காலத்தில் பெரிய அளவில் வளர்ச்சி பெறும்போது, அஜித் அவர்கள் விருப்பப்பட்டால் கண்டிப்பாக அவரை வைத்துப் படம் தயாரிப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அஜித்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயனின் இந்தப் பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.