அமெரிக்க வரி விதிப்பு 45 நாட்களை கடந்தது: நிவாரணத் திட்டம், குறைந்த வட்டிக் கடனுதவி கோரும் எம்எஸ்எம்இ துறை

Date:

அமெரிக்க வரி விதிப்பு 45 நாட்களை கடந்தது: நிவாரணத் திட்டம், குறைந்த வட்டிக் கடனுதவி கோரும் எம்எஸ்எம்இ துறை

அமெரிக்காவின் புதிய 50 சதவீத வரி விதிப்பு அமலாகி 45 நாட்கள் கடந்த நிலையில், அதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நிவாரணத் தொகுப்பும், குறைந்த வட்டி கடனுதவியும் அறிவிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தொழில்துறை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகுநாதன் கூறியதாவது:

“தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை 2021 தற்போது காலாவதியானது. உலக வர்த்தக நிலைமை கடுமையாக மாறியுள்ள நிலையில், அமெரிக்க வரி விதிப்பு ஏற்றுமதியாளர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. சிறு, நடுத்தர தொழில்துறைகள் மூடப்படும் நிலையிலும், தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். ஆனால் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து இதுவரை நேரடி நிவாரண நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.”

அவர் மேலும் கூறினார்:

“அரசு உடனடியாக நிவாரணத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். அதில்

  • குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி,
  • ஜிஎஸ்டி திருப்பிச் செலுத்தல்,
  • கப்பல் போக்குவரத்து செலவுக்கான சலுகை,
  • அவசர சூழ்நிலைகளுக்கான ஏற்றுமதி பாதுகாப்புத் திட்டம் ஆகியவை இடம்பெற வேண்டும்.”

மேலும், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற புதிய சந்தைகளில் பிராண்டிங் மற்றும் சந்தை மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், “வழிகாட்டும் பேச்சுகள் போதாது — எம்எஸ்எம்இ துறைக்கு இப்போது தேவை தரவுகளால் ஆதரிக்கப்படும் செயல்திறன் கொண்ட நடவடிக்கைகள்” என்றும் ரகுநாதன் தெரிவித்தார்.


தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் கூறியதாவது:

“ஜவுளித் துறை ரூ.90,000 கோடி, ரத்தினங்கள் ரூ.85,000 கோடி, ஆட்டோமொபைல் பாகங்கள் ரூ.58,000 கோடி, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் ரூ.23,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதிகள் அமெரிக்க வரி காரணமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் அமெரிக்க டீலர்கள் மாற்று விநியோகஸ்தர்களை நோக்கிச் செல்லலாம்.”

அவர் மேலும் கூறினார்:

“மொத்த ஏற்றுமதியில் 40 சதவிகித பங்களிப்பு வழங்கும் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இந்த நிலைமையில் கடுமையாகச் சிக்கியுள்ளன. அமெரிக்கா மனிதவள தட்டுப்பாட்டால் தனது தேவைகளை நிறைவேற்ற முடியாது. எனவே நாம் வளர்ந்து வரும் நாடுகளுடனான வணிக உறவுகளை வலுப்படுத்த வேண்டும். இது இந்திய ஏற்றுமதிக்கு நீடித்த பாதையை உருவாக்கும்.”

ஜெயபால் மேலும் சுட்டிக்காட்டினார்:

“ஒரே நாடு சார்ந்த ஏற்றுமதியில் இருந்து விலகி, சந்தையை பன்முகப்படுத்துவது அவசியம். தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியதால் உள்நாட்டு சந்தை வலுவடைந்துள்ளது. இது ஏற்றுமதி குறைவால் ஏற்பட்ட இழப்பை ஓரளவு ஈடு செய்கிறது. ஆனாலும், மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு நேரடி நிவாரணத் திட்டத்தை வழங்கி, புதிய வணிக ஒப்பந்தங்களை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.”


தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின் தலைவர் அருள்மொழி கூறியதாவது:

“அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஜவுளி ஏற்றுமதி செய்கிற நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நூல் விநியோகத்தில் ஈடுபடும் ஓபன் எண்ட் (OE) நூற்பாலைகளும் நெருக்கடி எதிர்கொள்கின்றன.”

அவர் மேலும் வலியுறுத்தினார்:

“மத்திய அரசு இந்த நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடன் திருப்பிச் செலுத்தும் விலக்கு, 25 சதவிகித நிதி கிரெடிட் (CC) உயர்வு, மேலும் பாலியஸ்டர் மற்றும் விஸ்கோஸ் போன்ற செயற்கை இழை இறக்குமதிக்கான தரக்கட்டுப்பாடுகளை நீக்கம் செய்ய வேண்டும்.”


வியாபாரத் துறையினர் ஒருமித்த கருத்தாக, “அமெரிக்க வரி தாக்கத்தால் பாதிக்கப்பட்ட எம்எஸ்எம்இ ஏற்றுமதியாளர்களை காப்பாற்ற அரசின் துரிதமான தலையீடே தேவை” எனக் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்த மழை – 51 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம்

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்த மழை – 51 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் திருநெல்வேலி...

ரோஹித் 121, கோலி 74 – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஆறுதல் வெற்றி

ரோஹித் 121, கோலி 74 – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஆறுதல்...

காவிரி உபரிநீரால் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர் முத்துசாமி ஆய்வு

காவிரி உபரிநீரால் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர்...

நெல்சன் இயக்கத்தில் ரஜினி – கமல் இணைவு உறுதி!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் இணைவு உறுதி! தமிழ் திரையுலகில் நீண்டநாள்...