சென்னை ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று இன்று தொடக்கம்
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் இன்று (சனிக்கிழமை) தொடங்குகின்றன.
இந்த தகுதி சுற்றில் 16 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் 4 வீராங்கனைகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறவுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா, வைஷ்ணவி அட்கர், மற்றும் தியா ரமேஷ் ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுகின்றனர்.
- அங்கிதா ரெய்னா, ஜப்பானின் மெய் யமகுச்சியை எதிர்கொள்கிறார்.
- ரியா பாட்டியா, ஜெர்மனியின் கரோலின் வெர்னர்ஜர்யுடன் மோதுகிறார்.
- வைஷ்ணவி அட்கர், ஜப்பானின் மெய் ஹோன்டமாவுடனும்,
- தியா ரமேஷ், ஆஸ்திரேலியாவின் அரினா ரோடினோவாவுடனும் பலப்பரீட்சை நடத்துகிறார்.
தகுதி சுற்றில், ஜப்பானின் நவோ ஹிபினோ முதல் தரவரிசை வீராங்கனையாக உள்ளார். அவர், தாய்லாந்தின் தசபோர்ன் நக்லோவை எதிர்கொள்கிறார்.