காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு
அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீநிவாசய்யா என்பவர், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள யூ.சி. பெர்கேலே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அவர் திடீரென காணாமல் போனார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சான் பிரான்சிஸ்கோ போலீஸார் மாணவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், காணாமல்போன மாணவர் சாகேத் ஸ்ரீநிவாசய்யாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது மரணம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.