துபாயில் இந்திய தொழிலதிபருக்கு ரூ.8 கோடி லாட்டரி பரிசு
துபாயைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் ராஜன் லால், சுமார் 25 ஆண்டுகள் காத்திருந்த பின்னர் லாட்டரியில் ரூ.8 கோடி பரிசு வென்று மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
நீண்ட காலமாக துபாயில் வசித்து வரும் ராஜன் லால், கடந்த ஜனவரி 30-ம் தேதி வரிப் பிடித்தம் இல்லாத மில்லினியம் மில்லியனர் குலுக்கலுக்கான லாட்டரி சீட்டை வாங்கியிருந்தார்.
இந்த குலுக்கலில் 3099 என்ற எண்ணைக் கொண்ட அவரது லாட்டரி சீட்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.8 கோடி பரிசாக கிடைத்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்ததாகவும், பல ஆண்டுகளின் விடாமுயற்சிக்குப் பிறகே இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும் ராஜன் லால் தெரிவித்துள்ளார்.