சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய இந்திய தபால் துறை நடவடிக்கை

Date:

சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய இந்திய தபால் துறை நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் சிவாலய ஓட்டத்தின் சிறப்புகளை உலகம் முழுவதும் அறியச் செய்யும் வகையில், சார்பில் நினைவு தபால் தலையும், சிறப்பு அஞ்சல் உறையும் வெளியிடப்பட உள்ளன.

கன்யாகுமரி பகுதியில் மகா சிவராத்திரி தினத்தன்று நடைபெறும் மஹா சிவாலய ஓட்டத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவாலய ஓட்டம் என்பது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பழமையான சிவாலயங்களுக்கு பக்தர்கள் “கோவிந்தா கோபாலா” என்று முழங்கியபடி ஓடி சென்று வழிபடும் தனித்துவமான ஆன்மிக மரத்தான் நிகழ்வாகும்.

இந்த நிகழ்வு சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்துவதுடன், மன உறுதி, உடல் வலிமை மற்றும் பக்தி உணர்வை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

இதன் தொடக்க நிகழ்ச்சியை இந்திய அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த முயற்சி சிவாலய ஓட்டத்தின் பெருமையை உலகளவில் எடுத்துச் செல்லும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

1,400 ஏக்கர் நில மீட்பு போராட்டம்: விவசாயிகள் 70 பேர் கைது

1,400 ஏக்கர் நில மீட்பு போராட்டம்: விவசாயிகள் 70 பேர் கைது சேலம்...

வி.கே.சசிகலா தலைமையில் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்

வி.கே.சசிகலா தலைமையில் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்...

ஜெப்ரீ எப்ஸ்டீன் மரணத்தில் புதிய சந்தேகம்: கொலை செய்யப்பட்டாரா?

ஜெப்ரீ எப்ஸ்டீன் மரணத்தில் புதிய சந்தேகம்: கொலை செய்யப்பட்டாரா? பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய...

நிஜ்ஜார் கொலை வழக்கு: கனடாவுடன் இணைந்து செயல்பட இந்தியா தயார்

நிஜ்ஜார் கொலை வழக்கு: கனடாவுடன் இணைந்து செயல்பட இந்தியா தயார் நிஜ்ஜார் கொலை...