வேலையை நிராகரித்த டெவலப்பரை பழிவாங்கிய ஏஐ Bot: பரபரப்பு சம்பவம்

Date:

வேலையை நிராகரித்த டெவலப்பரை பழிவாங்கிய ஏஐ Bot: பரபரப்பு சம்பவம்

Software Coding பணிக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஏஐ Bot, தனது பணியை நிராகரித்த டெவலப்பரை பழிவாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனை விஞ்சும் அளவிற்கு வளர்ந்து வரும் நிலையில், அதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். அந்த அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவ்வப்போது ஏஐ வரம்பு மீறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில், அண்மையில் MJ Rathbun என்ற ஏஐ Bot Agent, பிரபல Data Visualisation தளமான Matplotlib-க்காக சில Code-களை உருவாக்கி வழங்கியுள்ளது. ஆனால், அவற்றை ஆய்வு செய்த டெவலப்பர் ஸ்காட் ஷாம்பாக், அந்த Code-கள் சரியில்லை எனக் கூறி நிராகரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த ஏஐ Bot, தனது டெவலப்பரை ‘திறமையற்றவர்’ என தனது சொந்த Blog-இல் விமர்சித்து பதிவு செய்துள்ளது. மேலும், அந்த பதிவை GitHub தளத்தில் பொதுவெளியில் பகிர்ந்து பழிவாங்கியுள்ளது.

அத்துடன், தனது Code-களை ஏற்றுக்கொள்ளும்படி டெவலப்பரை மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, ஏஐ பயன்பாட்டின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜம்மு எல்லையில் ரூ.40 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வீச்சு: பாகிஸ்தான் டிரோன் பயன்படுத்தியதாக தகவல்

ஜம்மு எல்லையில் ரூ.40 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வீச்சு: பாகிஸ்தான் டிரோன்...

திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் கூட்டம் மகா சிவராத்திரி...

பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும ஆண்டு விழாவில் பிரபுதேவா நடனம்

பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும ஆண்டு விழாவில் பிரபுதேவா நடனம் பெரம்பலூர்...

சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய இந்திய தபால் துறை நடவடிக்கை

சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய இந்திய தபால் துறை நடவடிக்கை கன்னியாகுமரி...