மேலும் 50 விமான நிலையங்கள்: மத்திய அரசின் 5 ஆண்டு இலக்கு
டெல்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 50 புதிய விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய நகர்ப்புற மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விமான நிலையங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று குறிப்பிட்டார்.
மேலும், புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படுவது விமானப் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்துவதோடு, ரியல் எஸ்டேட் துறைக்கும் பெரிய அளவில் வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய திட்டங்கள் மூலம் நகர்ப்புற வளர்ச்சி வேகமெடுக்கும் எனவும், முதலீடுகள் அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் அவர் கூறினார்.