13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறாரா கிம் ஜாங் உன்?

Date:

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறாரா கிம் ஜாங் உன்?

பியாங்யாங்: வடகொரியாவின் தற்போதைய உச்சத் தலைவர் தனது 13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

1948ஆம் ஆண்டு கொரிய தீபகற்பப் பிரிவினைக்குப் பிறகு உருவான வடகொரியாவின் முதல் தலைவராக பதவியேற்றார். 1972ஆம் ஆண்டு ‘அதிபர்’ பதவியை உருவாக்கி, 1994ஆம் ஆண்டு உயிரிழக்கும் வரை ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 2011ஆம் ஆண்டு அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கிம் ஜாங் உன் ஆட்சியைத் தொடர்ந்து வருகின்றார்.

1948 முதல் இன்று வரை ஒரே குடும்பம் வடகொரியாவை ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கிம் ஜாங் உன்னுக்கு பிறகு குடும்ப ஆட்சி முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது அவரது மகள் வாரிசாக முன்மொழியப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

2022 நவம்பர் மாதம் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை நிகழ்வில், கிம் ஜாங் உன்னுடன் அவரது மகள் முதன்முறையாக பொதுமக்கள் முன் தோன்றினார். அதன்பிறகு பல அரசு மற்றும் ராணுவ நிகழ்வுகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். 2022ஆம் ஆண்டு முதல் இதுவரை 50க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற நிகழ்வில் , உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலும் கிம் ஜூ-ஏ பங்கேற்றது கவனத்தை பெற்றது.

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள வடகொரிய தொழிலாளர் கட்சியின் மாநாட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மேடையில் கிம் ஜாங் உன் தனது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது.

ஆணாதிக்கம் அதிகம் நிலவும் வடகொரியாவில் பெண் வாரிசு அறிவிக்கப்படுவது முக்கிய அரசியல் மாற்றமாக கருதப்படுகிறது. இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்த கிம் ஜாங் உன் போலவே, தனது மகளையும் முன்கூட்டியே அரசியல் அனுபவத்திற்கு தயார்படுத்தும் முயற்சியாக இதை சில ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பது உலக அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலின் 7-ஆம்...

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு: மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு: மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து சிபிஎஸ்இ 12-ஆம்...

2016–2022 காலகட்டத்துக்கான திரைப்பட, சின்னத்திரை விருதுகள் ஒரே மேடையில் வழங்கல்

2016–2022 காலகட்டத்துக்கான திரைப்பட, சின்னத்திரை விருதுகள் ஒரே மேடையில் வழங்கல் 2016 முதல்...

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் உயிரிழப்பு – நாடு முழுவதும் அதிர்ச்சி

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் உயிரிழப்பு – நாடு முழுவதும்...