பன்னுன் கொலை முயற்சி வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் நிகில் குப்தா
அமெரிக்காவில் நடைபெற்று வரும் பன்னுன் கொலை முயற்சி வழக்கில் இந்தியரான நிகில் குப்தா குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடை செய்யப்பட்ட ‘’ அமைப்பின் தலைவரான , இந்தியாவால் பயங்கரவாத குற்றச்சாட்டில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்ற அவரை அமெரிக்காவில் கொலை செய்ய சதி நடைபெற்றதாகவும், அதில் இந்திய உளவு அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்க தரப்பு குற்றஞ்சாட்டியது.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இந்தியரான நிகில் குப்தா கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவர் தமக்குச் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளதுடன், இந்தியா–அமெரிக்கா உறவுகள் குறித்தும் அரசியல் மற்றும் தூதரக மட்டங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.