ஹமாஸ் 20 இஸ்ரேல் பிணைக்கையான்களை விடுவிக்கத் திட்டம்!
ஹமாஸ் தீவிரவாத படையினர்கள் தங்களிடம் உள்ள பிணைக்கையான்களை திங்கட்கிழமை (அக்டோபர் 13) முதல் விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை முன்னணி சர்வதேச செய்தி நிறுவனங்கள் ஹமாஸ் தரப்பின் மூலம் உறுதி செய்துள்ளன.
காசா பகுதியில் அமைதி நிலைநிறுத்தும் ஆலோசனை கூட்டம் நாளை எகிப்தில் நடக்க உள்ளது. இதில் சுமார் 20 உலக நாடுகள் கலந்து கொள்கின்றன, அதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளார். கூட்டம் தொடங்கும் முன்பே ஹமாஸ் பிணைக்கையான்களை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான உடன்படிக்கையின் படி, முதல் கட்டமாக இஸ்ரேலைச் சேர்ந்த சுமார் 20 பிணைக்கையான்கள் விடுவிக்கப்பட உள்ளனர். அதே நேரத்தில், இஸ்ரேல் சிறையில் உள்ள 2,000 பாலஸ்தீனியர்களையும் விடுவிக்க உள்ளது. இதை ஹமாஸ் தரப்பில் ஒசாமா ஹம்தன் உறுதி செய்துள்ளார்.
காசா அமைதி ஆலோசனை கூட்டம்:
நாளைய கூட்டம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் நடைபெறுகிறது. இதில் காசாவில் போரை முடித்து அமைதியை நிலைநிறுத்துவது, மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து புதிய முடிவுகளை எடுப்பது ஆகியவை விவாதிக்கப்பட உள்ளது.