நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் முதல் அமர்வு நிறைவு
முதல் அமர்வில் பரபரப்பான விவாதங்கள்; இரண்டு அவைகள் மார்ச் 9-ம் தேதி ஒத்திவைப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 28-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி நடப்பாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதங்கள் பல நாட்களாக நடைபெற்றன.
விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் இடைநிறுத்தப்பட்டன. இதன்போது, எதிர்க்கட்சியினர் பிரதமர் மோடி மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்வதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். அதன்படி, சபாநாயகர் அறையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முற்றுகையிட்டதும் பரபரப்பான நிலை உருவானது.
இந்த பரபரப்பான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், இன்றைய தினம் முதல் அமர்வுடன் நிறைவு பெற்றுள்ளது. இரு அவைகளும் மார்ச் 9-ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தலைவர்கள் அறிவித்துள்ளனர்.