வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
வங்கதேச ஜனநாயக வெற்றியை பாராட்டிய பிரதமர்
வங்கதேச பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, பிஎன்பி கட்சியின் தலைவராக ஆட்சி அமைக்கப்போகிறார். இந்த தேர்தல் வெற்றி நாட்டில் புதிய அரசியல் தலைமுறையின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்தார். தனது சமூக ஊடக பதிவில் பிரதமர் மோடி, வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை செயல்படச் செய்ததற்கும், தீர்க்கமான வெற்றியை பெற்றதற்கும் தாரிக் ரஹ்மானுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை கூறியுள்ளார்.
மேலும், இந்த வெற்றி வங்கதேச மக்கள் தாரிக் ரஹ்மான் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது எனவும், ஜனநாயக முறையில் வங்கதேசத்தை எப்போதும் இந்தியா ஆதரிக்குமெனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.