விமானப்படைக்கு மேலும் 114 ரஃபேல் போர் விமானங்கள் – மத்திய அரசின் ஒப்புதல்
மூன்றேகால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம்; ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்திக்கும் முன்னுரிமை
இந்திய வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்திய விமானப்படைக்கு கூடுதலாக 114 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுமார் மூன்றேகால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மெகா ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
திட்டத்தின் படி, 114 ரஃபேல் விமானங்களில் 18 விமானங்கள் நேரடியாக நாட்டிலிருந்து வாங்கப்படவுள்ளன. மீதமுள்ள 96 விமானங்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உற்பத்திக்காக நிறுவனம் நகரில் உற்பத்தி ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது. 2028ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கூறுகள் வெளியாவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்தியா வருகை தர உள்ள நிலையில், இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் இருநாட்டு உறவுகளில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.