பட்ஜெட் விவாதம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டும் – கிரண் ரிஜிஜு
பட்ஜெட் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில், ராகுல் காந்தி பயனுள்ள கருத்துகளை முன்வைக்கவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற செயல்பாடுகள், இன்று சுறுசுறுப்பாக நடைபெற்றன. அந்த நேரத்தில் பட்ஜெட் விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, இந்தியாவின் தரவுகள் அமெரிக்காவுக்கு பகிரப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அவை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் அவையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என அவைத் தலைவர் அறிவித்தார்.