கனடா பள்ளியில் துப்பாக்கி சூடு – 9 பேர் பலி, பலர் காயம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்து, அங்கு இருந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மீது தாறுமாறாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த போலீசார் பள்ளி வளாகத்தை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்த 25 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
மேலும், தாக்குதல் நடத்தியவர் ஒரு பெண் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.