இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு
செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா மேற்கொண்டு வரும் உலகளாவிய முயற்சிகளையும், அந்த துறையில் இந்தியா காட்டி வரும் தலைமைத் திறனையும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் பெரிதும் பாராட்டியுள்ளார்.
டெல்லியில் வரும் பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த முக்கிய மாநாட்டை முன்னெடுத்து நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது என தெரிவித்தார்.
மேலும், இந்த உச்சிமாநாடு வளர்ந்து வரும் நாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தங்களது திறனையும் பங்களிப்பையும் மேம்படுத்த உதவும் ஒரு முக்கிய மேடையாக அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.