டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபருக்கு ஆயுள் சிறை
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய முயன்ற வழக்கில், தொடர்புடைய நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள தனது இல்லத்திற்குச் சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், அவரது வீட்டு அருகே துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆயுதத்துடன் அங்கிருந்து தப்பியோடிய நபரை காவல்துறையினர் விரைவாக கைது செய்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ரியான் வெஸ்லி ரூத் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு அவர் குற்றம் செய்தவர் என நீதிமன்றம் தீர்மானித்தது.
இந்நிலையில், வழக்கின் இறுதி தீர்ப்பாக ரியான் வெஸ்லி ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.