‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் சேவைக்கு முடிவு – சிஐஏ அறிவிப்பு
உலக நாடுகள் குறித்த விரிவான புள்ளிவிவரங்களை வழங்கி வந்த ‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ என்ற தகவல் வெளியீட்டு சேவையை நிறுத்துவதாக அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1962ஆம் ஆண்டு, அமெரிக்க உளவுத்துறையினரின் உள்நாட்டு மற்றும் ரகசிய பயன்பாட்டுக்கான ஆவணமாக ‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு நாட்டின் பொருளாதார நிலவரம், ராணுவ திறன், இயற்கை வளங்கள், சமூக அமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான துல்லியமான விவரங்கள் இதில் இடம்பெற்றிருந்தன.
1997ஆம் ஆண்டு இணையதள வடிவில் பொதுமக்களுக்கு கிடைக்கத் தொடங்கிய பின்னர், உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இது முக்கியமான தகவல் ஆதாரமாக மாறியது.
இந்த நிலையில், தற்போது அந்த தகவல் சேவையின் வெளியீடு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவுக்குப் பின்னுள்ள அதிகாரப்பூர்வ காரணங்களை சிஐஏ இதுவரை வெளியிடவில்லை.