புளியரை அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா பக்தி உற்சாகம்
தென்காசி மாவட்டம் புளியரை அருகே அமைந்துள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் நடைபெற்ற தை உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோயிலின் தட்சிணாமூர்த்தி சன்னதியில் கடந்த 31ஆம் தேதி தை உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில்தோறும் குருவிற்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற தவசு காட்சி நிகழ்வை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
பின்னர், சுவாமி மற்றும் அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்வுகளை காணவும், தரிசனம் பெறவும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கோயிலில் திரண்டனர்.