ரூ.30 லட்சம் லஞ்ச கோரிக்கை – ஹைதராபாத்தில் கண்காணிப்பு பொறியாளர் சிக்கினார்

Date:

ரூ.30 லட்சம் லஞ்ச கோரிக்கை – ஹைதராபாத்தில் கண்காணிப்பு பொறியாளர் சிக்கினார்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், நிலுவையில் உள்ள பில்களை பரிசீலித்து ஒப்புதலுக்கு அனுப்புவதற்காக லஞ்சம் பெற்றதாக கண்காணிப்பு பொறியாளர் ஒருவரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத் குக்கட்பல்லி மண்டலத்தில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வரும் பொட்டுத்துரி சின்னா ரெட்டி என்பவரே கைது செய்யப்பட்ட நபர் ஆவார்.

ஒரு ஒப்பந்ததாரர் நிறைவு செய்த பணிகளுக்கான ரூ.1.40 கோடி மதிப்பிலான நிலுவை பில்களை சரிபார்த்து அனுமதி வழங்க, ரூ.30 லட்சம் லஞ்சமாக அவர் கோரியதாக கூறப்படுகிறது.

இதில் முதல் தவணையாக ரூ.15 லட்சத்தை, அவரது கணினி ஆபரேட்டர் மூலம் பெற்றுக் கொண்ட போது, ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இஸ்லாமாபாத்தை பின்தள்ளிய டிரம்ப் – இந்தியா முன்னேற்றம்

இஸ்லாமாபாத்தை பின்தள்ளிய டிரம்ப் – இந்தியா முன்னேற்றம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே...

தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி ஆலயத்தில் தை உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது

தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி ஆலயத்தில் தை உத்திர விழா சிறப்பாக...

அடிப்படை வசதிகள் இன்றியே அவசரமாக திறக்கப்பட்ட தருமபுரி புதிய பேருந்து நிலையம்

அடிப்படை வசதிகள் இன்றியே அவசரமாக திறக்கப்பட்ட தருமபுரி புதிய பேருந்து நிலையம் தருமபுரி...

அஜித் தோவல்–ரூபியோ சந்திப்பு: மோடியின் உறுதியான நிலைப்பாட்டுக்கு அடிபணிந்த அமெரிக்கா – பின்னடைந்த ட்ரம்ப்

அஜித் தோவல்–ரூபியோ சந்திப்பு: மோடியின் உறுதியான நிலைப்பாட்டுக்கு அடிபணிந்த அமெரிக்கா –...