மாவோயிஸ்ட் தலைவர் ராமண்ணாவுக்காக அமைக்கப்பட்ட நினைவிடம் இடிப்பு
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், பல ஆண்டுகளாக வன்முறையின் அடையாளமாக கருதப்பட்ட முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் ராமண்ணாவுக்காக அமைக்கப்பட்ட நினைவிடத்தை சிஆர்பிஎப் பாதுகாப்புப் படையினர் முற்றாக அகற்றினர்.
அடர்ந்த காடுகள் சூழ்ந்த சுக்மா மாவட்டத்தில் உள்ள கோகுண்டா கிராமம், நீண்ட காலமாக மாவோயிஸ்ட் குழுக்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
இந்தப் பகுதிகளை மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டெடுக்கும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிஆர்பிஎப் கமாண்டன்ட் ஹிமான்ஷு பாண்டே தலைமையில் செயல்பட்ட படையினர், ராமண்ணாவை நினைவுகூர அமைக்கப்பட்ட கட்டிடத்தை இடித்து முழுமையாக அகற்றினர்.
இந்த நடவடிக்கை, அந்தப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் தாக்கமும் ஆதிக்கமும் குறைந்து வருவதை வெளிப்படுத்தும் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது