மாஸ்கோவில் கடும் பனிக்குளிரை மீறி வினோத சாகச விளையாட்டில் ஈடுபட்ட மக்கள்
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் கடுமையான பனிக்குளிர் நிலவி வரும் சூழலிலும், அந்நாட்டு மக்கள் தங்களின் துணிச்சலும் வித்தியாசமான பொழுதுபோக்கு ஆர்வமும் மூலம் உலக கவனத்தை ஈர்த்துள்ளனர்.
மாஸ்கோவில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியசிற்கும் கீழ் குறைந்திருந்த நிலையில், ‘ஐஸ் ஃப்ளோட்டிங்’ எனப்படும் புதுமையான குளிர்கால விளையாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். கடும் பனிப்பொழிவு நிலவியபோதும், ஒரு குழுவினர் சிவப்பு நிற உடைகளை அணிந்து, உறைபனி சூழ்ந்த நீர்ப்பரப்பில் மிதந்தபடி இந்த சாகச விளையாட்டை அனுபவித்தனர்.
அண்மைக்காலமாக மாஸ்கோவில் வெப்பநிலை -20°C அளவுக்கும் கீழ் வீழ்ந்திருந்தாலும், அந்த நிலையை பொருட்படுத்தாமல், சாகசத்தில் ஈடுபட்டவர்கள் பனிக்கட்டுகளுக்கு இடையில் இறங்கி, தண்ணீரின் மேற்பரப்பில் அமைதியாக மிதந்து தங்களின் ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாக கழித்தனர்.