ராகுல் காந்தி கருத்துக்கு கண்டனம் – காங்கிரஸ் அலுவலகம் முன் சீக்கியர்கள், பாஜக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தி வெளியிட்ட கருத்துகளை கண்டித்து, டெல்லியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தின் முன்பாக சீக்கிய அமைப்பினரும் பாஜக தொண்டர்களும் இணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை “துரோகி” என ராகுல் காந்தி குறிப்பிட்டதற்கு எதிராக, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு ஏராளமான சீக்கியர்கள் திரண்டனர். ராகுல் காந்தியை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டம் நடத்தியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து, பின்னர் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.