மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை
வரும் 11-ந் தேதி புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தலிலும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த அரசியல் சூழலில், பிரதமர் மோடி 11 அல்லது 12-ந் தேதிகளில் புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. அவரது இந்த பயணத்தின் போது, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.
மேலும், புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.