திருப்பதி தொடர்பான சர்ச்சை – கடும் எச்சரிக்கை விடுத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையான் விஷயத்தில் தவறான செயல்களில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடுமையாக எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட கருத்தில், திருமலையின் புனிதத்தன்மையை மாசுபடுத்தும் நோக்கில் செயல்பட்டவர்கள், அதற்கான தண்டனையை இவ்வுலகிலேயே அனுபவிக்க நேரிடும் என தெரிவித்தார்.
மேலும், தான் ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பதவியில் இருந்தாலும், ஸ்ரீவெங்கடேசப் பெருமான் முன் ஒரு எளிய பக்தனாக மட்டுமே தன்னை கருதுவதாகவும் கூறினார். திருமலையின் ஆன்மிக மரபுகள் மற்றும் புனிதத்தைக் காக்கும் விஷயத்தில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் உறுதியளித்தார்.