ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா – பக்தர்கள் பெருந்திரள்

Date:

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா – பக்தர்கள் பெருந்திரள்

ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச விழாவையொட்டி, அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி மற்றும் அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் இணைந்து புறப்பாடு செய்து, லட்சுமண தீர்த்தக் குளத்தை அடைந்தனர்.

அங்கு நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவம் மிகுந்த பக்தி பரவசத்துடன், வேத மந்திரங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமியை காண, குளக்கரையில் கூடியிருந்த பக்தர்கள் “ஓம் நம சிவாய” என முழங்கித் துதித்து வழிபட்டனர்.

இந்த தெப்பத் திருவிழா நிகழ்வினால் ராமேஸ்வரம் முழுவதும் ஆன்மிகக் கோலாகலம் நிறைந்ததாகக் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் அவதி கொடைக்கானலில் செயல்பட்டு...

பட்ஜெட்டில் அதிவேக ரயில் திட்டம் – சென்னை–பெங்களூரு பயணம் 1 மணி 13 நிமிடமாக குறைவு

பட்ஜெட்டில் அதிவேக ரயில் திட்டம் – சென்னை–பெங்களூரு பயணம் 1 மணி...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்துக்குள் நுழைந்த காவல்துறை வாகனம் – முற்றுகையால் பரபரப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்துக்குள் நுழைந்த காவல்துறை வாகனம் –...

விழுப்புரம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் தைப்பூச விழா – மிளகாய் கரைசல் அபிஷேகம் காண அலைமோதிய பக்தர்கள்

விழுப்புரம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் தைப்பூச விழா – மிளகாய்...