மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி பங்கீட்டு விகிதத்தில் மாற்றம் இல்லை

Date:

மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி பங்கீட்டு விகிதத்தில் மாற்றம் இல்லை

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில், 16-வது நிதிக்குழு முன்வைத்த பரிந்துரைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விபத்து காப்பீடுகளுக்கு வருமான வரி சலுகை வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026–27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், பதினாறாவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும் என்றும், மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி வருவாய் பங்கீட்டு விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பொருளாதார நிதிப்பற்றாக்குறை 4.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. இதனுடன், விபத்துக்கால காப்பீட்டுத் திட்டங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மும்பை ஐஐடியுடன் இணைந்து content creator ஆய்வகம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 15,000 மேல்நிலைப் பள்ளிகளிலும், 500 கல்லூரிகளிலும் ABGC content creator lab-கள் நிறுவப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உதவி உபகரணங்களின் உற்பத்தி, வெளிநாடுகளை சாராமல் உள்நாட்டிலேயே அதிகரிக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் அவதி கொடைக்கானலில் செயல்பட்டு...

பட்ஜெட்டில் அதிவேக ரயில் திட்டம் – சென்னை–பெங்களூரு பயணம் 1 மணி 13 நிமிடமாக குறைவு

பட்ஜெட்டில் அதிவேக ரயில் திட்டம் – சென்னை–பெங்களூரு பயணம் 1 மணி...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா – பக்தர்கள் பெருந்திரள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா – பக்தர்கள் பெருந்திரள் ராமேஸ்வரம்...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்துக்குள் நுழைந்த காவல்துறை வாகனம் – முற்றுகையால் பரபரப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்துக்குள் நுழைந்த காவல்துறை வாகனம் –...