140 கோடி மக்களின் நம்பிக்கைகளை பிரதிபலிக்கும் பட்ஜெட் – பிரதமர் மோடி
வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய தேவையான அடித்தளத்தை இந்த பட்ஜெட் உருவாக்கியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், மத்திய பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், சிறப்பான பட்ஜெட்டை வழங்கியதன் மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளதாக அவர் பாராட்டினார்.
மேலும், இந்த முன்னேற்றத்தை நோக்கி அமைந்த பட்ஜெட், இந்தியாவை செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களின் உலகளாவிய மையமாக மாற்றும் திறன் கொண்டது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.