அமெரிக்கா முழுவதும் 300 நகரங்களில் பெரும் மக்கள் எழுச்சி
அமெரிக்காவின் சுமார் 300 நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டங்களில் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள், மேலும் சில பிரபலங்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஐஸ் (ICE) அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தின் போது, அலெக்ஸ் பிரெட்டி என்ற போராட்டக்காரர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை கண்டித்து, பல நகரங்களில் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.