வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு புதிய சலுகைகள் – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

Date:

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு புதிய சலுகைகள் – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய அரசின் பட்ஜெட்டில், வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்களுக்காக பல்வேறு புதிய நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முதலீட்டு உச்சவரம்பு தற்போது உள்ள 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் சொத்துகளை விற்பனை செய்யும் போது செலுத்த வேண்டிய வருமான வரி தொகை குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 லட்சம் ரூபாய் வரையிலான சொத்துகளை அறிவிக்க தவறியவர்களுக்கு, தொடர்புடைய வழக்குகளில் இருந்து விலக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், வெளிநாட்டு பயணங்களுக்கு விதிக்கப்படும் 5 முதல் 20 சதவீதம் வரை இருந்த வரி பிடித்தம், இனி 2 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக அனுப்பப்படும் பணத்தில் பிடித்தம் செய்யப்படும் வரியும் குறைக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதல்: 133 பேர் உயிரிழப்பு

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதல்: 133 பேர் உயிரிழப்பு பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த...

இந்தியா உலகத் தலைமை நாடாக உருவெடுக்க உதவும் பட்ஜெட்

இந்தியா உலகத் தலைமை நாடாக உருவெடுக்க உதவும் பட்ஜெட் உலக அளவில் அனைத்து...

தனி நபர் வருமான வரி விலக்கில் மாற்றமில்லை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தனி நபர் வருமான வரி விலக்கில் மாற்றமில்லை – நிதியமைச்சர் நிர்மலா...

தைப்பூச விழா – வடபழனி முருகன் ஆலயத்தில் குவிந்த பெருந்திரள் பக்தர்கள்

தைப்பூச விழா – வடபழனி முருகன் ஆலயத்தில் குவிந்த பெருந்திரள் பக்தர்கள் தைப்பூச...