மைதானத்துக்குள் புகுந்த எலியால் கால்பந்து ஆட்டம் தடை!
வேல்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கிடையிலான உலகக் கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து போட்டி, மைதானத்துக்குள் எலி ஒன்று நுழைந்ததால் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
வேல்ஸ் நாட்டின் கார்டிப் நகரில் நேற்று நடைபெற்ற பிபா உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில், இரு அணிகளும் மோதின. பெல்ஜியம் அணி 2–1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, திடீரென கோல் கீப்பர் திபோ கோர்டோயிஸ் பாதுகாப்புப் பகுதியில் எலி ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது.
இதனால் ஆட்டம் சில நிமிடங்கள் தடைபட்டது. எலியை பிடிக்க கோர்டோயிஸ் முயன்றார், ஆனால் அது தப்பித்து துள்ளித் துள்ளி ஓடத் தொடங்கியது. இறுதியில் வேல்ஸ் அணியின் முன்கள வீரர் பெர்னன் ஜான்சன், எலியை சைடுலைன் வழியாக வெளியே துரத்தியார். பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.
போட்டியின் முடிவில் பெல்ஜியம் அணி 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெல்ஜியம் சார்பில் கெவின் டி ப்ரூய்ன் (18, 76), தாமஸ் மியூனியர் (24), லியாண்ட்ரோ ட்ராசார்ட் (90) தலா ஒரு கோல் அடித்தனர். வேல்ஸ் அணிக்காக ஜோ ரோடன் (8) மற்றும் நேதன் பிராட்ஹெட் (89) தலா ஒரு கோல் அடித்தனர்.