காசா அமைதி வாரியத்தில் 22 நாடுகள் டிரம்ப் முன்னிலையில் சேர சம்மதம்
போரால் பாதிக்கப்பட்ட காசாவில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள காசா அமைதி வாரியத்தில் இணைய 22 நாடுகள் சம்மதித்துள்ளன.
இந்த அமைதி முயற்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததன் மூலம், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் ஏற்பட காரணமாகியுள்ளது.
போரினை நிறுத்தும் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாக காசா அமைதி வாரியம் அமைக்கப்பட உள்ளதாக டிரம்ப் அறிவித்தார். இதற்கு முன்னதாக, 50க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவின் அழைப்புக்கு பதில் அளித்திருந்தன.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில், டிரம்ப் முன்னிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் காசா அமைதி வாரியத்தில் இணைய சம்மதம் தெரிவித்தனர்.