28-ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள் பயணத்திற்காக 28-ம் தேதி தமிழகம் வர உள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக–பாஜக கூட்டணி (தேசிய ஜனநாயக கூட்டணி) அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 23-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பரப்புரை செய்தார்.
அதன்படி, இரு நாள் பயணமாக வரும் அமித் ஷா பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து, தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடியை தொடர்ந்து அமித் ஷாவின் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.