பாதுகாப்பு ஏற்றுமதியில் இந்தியாவுக்கு புதிய சாதனை – ஆர்மேனியாவுக்கு அனுப்பப்பட்ட பினாகா ராக்கெட் அமைப்பு

Date:

பாதுகாப்பு ஏற்றுமதியில் இந்தியாவுக்கு புதிய சாதனை – ஆர்மேனியாவுக்கு அனுப்பப்பட்ட பினாகா ராக்கெட் அமைப்பு

ஒருகாலத்தில் பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்த நாடாக இருந்த இந்தியா, கடந்த 11 ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்பு ஏற்றுமதி நாடாக உருவெடுத்துள்ளது.

அதன் முக்கிய அடையாளமாக, இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியில் புதிய மைல்கல்லாக ஆர்மேனியாவுக்கு பினாகா ராக்கெட் அமைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, நாட்டிலேயே தயாரிக்கப்படும் மல்டி பேரல் ராக்கெட் ஏவுகணை அமைப்புகளை மேலும் மேம்படுத்த இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வடிவமைத்துள்ள,

உலகின் முன்னணி ராக்கெட் அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் பினாகா அமைப்பை,

ஆர்மேனியா 2022ஆம் ஆண்டு சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தின் மூலம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தது.

அந்த ஒப்பந்தத்தின் படி, பினாகா ராக்கெட் அமைப்பின் முதல் தொகுதி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலிருந்து ஆர்மேனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஏற்றுமதி குறித்து கருத்து தெரிவித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

பினாகா ராக்கெட் அமைப்பின் வெளிநாட்டு ஏற்றுமதி, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்நுட்பத் திறனை உலகிற்கு நிரூபிக்கும் சான்றாகும் என குறிப்பிட்டார்.

மேலும் அவர்,

பத்து ஆண்டுகளுக்கு முன் 1,000 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி, தற்போது சுமார் 24,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும்,

2014ஆம் ஆண்டு 46,425 கோடி ரூபாயாக இருந்த உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி, தற்போது 1.51 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே பினாகா MK-1 மேம்படுத்தப்பட்ட ராக்கெட் அமைப்பு இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள நிலையில்,

அதைவிட மேம்பட்ட புதிய பினாகா பதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இராணுவத்தில் சேர்க்கப்பட திட்டமிடப்பட்டது.

சிவபெருமான் பயன்படுத்தியதாக புராணங்களில் குறிப்பிடப்படும் மிக சக்திவாய்ந்த வில்லின் பெயர்தான் “பினாகா”.

அதே பெயரில் உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட் அமைப்பு, இந்திய இராணுவத்திற்கு அபாரமான தாக்குதல் திறனை வழங்கியுள்ளது.

முழுமையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த பினாகா அமைப்பு,

மலைப்பகுதிகளில் இருந்தே தாக்குதல் நடத்தும் வகையில்,

45 கிலோமீட்டர் முதல் 75 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக உள்ளது.

இதனை மேலும் மேம்படுத்தி,

120 கிலோமீட்டர் முதல் 300 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறனுடன் புதிய பினாகா அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பினாகா மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர்,

மிகக் குறுகிய நேரத்தில் பல இலக்குகளை அழிக்கக்கூடிய அதிநவீன ஆயுதமாகும்.

வெறும் 44 விநாடிகளில் 72 ராக்கெட்டுகளை ஏவி, வெவ்வேறு இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் இதற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 250 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து,

எதிரி முகாம்கள், பதுங்கு குழிகள் மற்றும் ஆயுத களஞ்சியங்களை முற்றாக அழிக்கக்கூடிய வல்லமை இதற்கு உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு கடும் எச்சரிக்கையாகக் கருதப்படும் இந்த பினாகா அமைப்பை ஆர்மேனியா கொள்முதல் செய்துள்ளதைத் தொடர்ந்து,

தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள்,

இந்த ராக்கெட் அமைப்பை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்திய அரசு கடந்த ஆண்டை பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்களுக்கான ஆண்டாக அறிவித்தது.

அதன்படி, சைபர் பாதுகாப்பு, விண்வெளி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லெர்னிங், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை பதிவு செய்துள்ளது.

உலகளவில் ராணுவ செலவினங்களில் முன்னணி ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

மொத்தமாக 6.81 லட்சம் கோடி ரூபாய் ராணுவ பட்ஜெட்டில்,

2.67 லட்சம் கோடி ரூபாய் நவீனமயமாக்கலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் உள்நாட்டு கொள்முதல் மற்றும் தேவையான அளவு இறக்குமதிகளுக்கு சமநிலையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக உயர்த்தியுள்ள மத்திய அரசு,

வெளிநாட்டு நிறுவனங்களை வெறும் விற்பனையாளர்களாக அல்லாமல், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தி செய்யும் கூட்டாளர்களாக மாற்றியுள்ளது.

தற்போது, இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளில் சுமார் 65 சதவீத உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

செலவு குறைந்ததும், உயர்ந்த தொழில்நுட்பத் திறன் கொண்டதுமான இந்திய பாதுகாப்புத் தளவாடங்கள்,

உலக நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றன.

அதன் தொடக்கமாகவே, ஆர்மேனியாவுக்கான பினாகா ராக்கெட் அமைப்பின் ஏற்றுமதி அமைந்துள்ளது.

பாதுகாப்பு ஏற்றுமதி என்பது வெறும் பொருளாதார லாபம் மட்டுமல்ல; அது நாட்டின் ராஜதந்திர வலிமையையும் வெளிப்படுத்தும் கருவி என்பதை,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உலக அரங்கில் நிரூபித்து வருகிறது.

மாறிவரும் உலக அரசியல் சூழலில்,

இந்தியாவின் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும், புதிய வரலாற்றுச் சாதனையாகவே பதிவாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுமியின் அன்புக்கு நெகிழ்ந்து நன்றி கூறி உறுதி அளித்த பிரதமர் மோடி

சிறுமியின் அன்புக்கு நெகிழ்ந்து நன்றி கூறி உறுதி அளித்த பிரதமர் மோடி மதுராந்தகத்தில்...

நேற்றுவரை பிரகாசமாகத் தோன்றிய சூரியன் – அண்ணாமலை கருத்து

நேற்றுவரை பிரகாசமாகத் தோன்றிய சூரியன் – அண்ணாமலை கருத்து நேற்றுவரை பிரகாசமாகத் தோன்றிய...

பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெற்றோர்களின் பாதங்களைத் துதி செய்து ஆசி பெற்றனர்

பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெற்றோர்களின் பாதங்களைத் துதி செய்து ஆசி...

“சர்வதேச ரவுடி” போக்கில் டிரம்ப் – உலகம் முழுவதும் அதிகரிக்கும் விமர்சனங்கள்

“சர்வதேச ரவுடி” போக்கில் டிரம்ப் – உலகம் முழுவதும் அதிகரிக்கும் விமர்சனங்கள் பகிரங்க...