தேனியில் தேசிய சப்-ஜூனியர் கால்பந்து அணிக்கான பயிற்சி முகாம்
2025–26ஆம் ஆண்டுக்கான தேசிய சப்-ஜூனியர் ஆடவர் கால்பந்து போட்டி சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கான தமிழக அணியின் பயிற்சி முகாம் அக்டோபர் 18 முதல் 30 வரை தேனி மாவட்டம் போட்டிநாயக்கனூரில் உள்ள இசட்கேஎம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என தமிழ்நாடு கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
பயிற்சி முகாமுக்குத் தேர்வான தமிழக வீரர்கள் வருமாறு:
ஓமேஷ்வர், அங்குஷ் பிஸ்வாஸ், நிஷாந்த் ராய், அஸ்வின் கார்த்திக், முகமது ரைஹான், ரோஷன், கோகுல், கவின் ஜெய், தீர்த் கோத்தாரி, தஹீலம்பம் லான்சென்பா, நிரஞ்சன், முகமது அஸ்லான் லாண்ட்ஜ், கே. ரோஷன், புவன், கீர்த்தன் கெர்ராட், அபிட் நெகோ, ஜேக் ரொமாரியோ, ஜெரமையா, ரித்திக் செந்தில்குமார், குஞ்சாப்பு நிகில் தேஜ், சவுவிக் ஹால்டர், கேப்ரியோ எஸ். யுப்பிலி, கனீஷ் ஆர்யா, பி. டுடே, கே. வினீத்.
தமிழ்நாடு கால்பந்து சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.