ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
ஈரானில் நிலவி வரும் அரசியல் குழப்பம் மற்றும் போராட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவங்கள் ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
ஈரானில் நடைபெறும் போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி முன்வைத்த குற்றச்சாட்டுகளை கரோலின் லீவிட் மறுத்தார். மேலும், ஈரானில் நிலவும் சூழ்நிலையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஈரானில் வன்முறை மற்றும் கொலைகள் தொடர்ந்தால் அதற்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.