பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம் – சமூக ஒற்றுமையின் அடையாளம்

Date:

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம் – சமூக ஒற்றுமையின் அடையாளம்

பாகிஸ்தானின் கராச்சி நகரில், ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வு அந்நாட்டில் வாழும் இந்து சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பெரும் திருமண விழாவை பாகிஸ்தான் இந்து கவுன்சில் மற்றும் டாக்டர் பிரேம் குமார் சீதல் தாஸ் நினைவு அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சமூக திருமண விழா, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த இந்து இளைஞர், இளைஞிகளுக்கு வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்க உதவி வருகிறது.

கராச்சி நகரில் உள்ள ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், பாரம்பரிய இந்து திருமண முறைகளின்படி, 76 ஜோடிகள் ஒரே மேடையில் மலர் மாலைகளை மாற்றிக்கொண்டு, தங்களது இல்லற வாழ்க்கையைத் தொடங்கினர். திருமண மந்திரங்கள், வேத சடங்குகள் மற்றும் பக்தி முழக்கங்களுடன் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அறக்கட்டளை சார்பில் மணமக்கள் அனைவருக்கும் சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள் இடம்பெற்றிருந்தது. இது புதுமணத் தம்பதிகளுக்கு பெரும் ஆதரவாக அமைந்துள்ளது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ரமேஷ் குமார் வான்க்வானி, மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், இந்த சமூக திருமண விழா கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுவரை 1,850க்கும் மேற்பட்ட மணப்பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பெருமையுடன் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சி இந்து சமூகத்தின் ஒற்றுமையையும், பண்பாட்டையும் பாதுகாக்கும் முக்கிய முயற்சியாக விளங்குவதாக அவர் கூறினார். பாகிஸ்தானில் வாழும் இந்து சமூகத்தினருக்கு கல்வி, திருமணம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் ஆதரவு வழங்குவது இந்து கவுன்சிலின் முதன்மை நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பெரும் திருமண விழா, பாகிஸ்தானில் வாழும் இந்து சிறுபான்மை சமூகத்தினரின் பண்பாட்டு அடையாளத்தையும், சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“திமுகவினரால் தமிழகம் தலைகுனிகிறது” – அண்ணாமலை கடும் கண்டனம்!

"திமுகவினரால் தமிழகம் தலைகுனிகிறது" - அண்ணாமலை கடும் கண்டனம்! சென்னை: விமானப் பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக...

“ஈரான் அணு ஆயுதம் ஏந்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” – வெள்ளை மாளிகை அதிரடி அறிக்கை!

"ஈரான் அணு ஆயுதம் ஏந்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - வெள்ளை...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வழிபாடு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வழிபாடு! திருச்சி: பூலோக...

ராஜோரி: “ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்” ராணுவ வீரர்கள் சார்பில் பிரம்மாண்ட ரத்த தான முகாம்!

ராஜோரி: "ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்" ராணுவ வீரர்கள் சார்பில் பிரம்மாண்ட ரத்த தான...