ஈரானில் தீவிர போராட்டம்: அரசு ஊடகக் கட்டடங்கள் தீயிட்டு நசுக்கியனர்
ஈரானில் தற்பொழுது நடைபெறும் போராட்டங்களில், போராட்டக்காரர்கள் அரசு ஊடக கட்டடங்களை தீயிட்டு அழித்துள்ளனர்.
கடுமையான பொருளாதார சிக்கல்கள் மற்றும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த இரண்டு வாரங்களாக பிரதான நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டங்களை கட்டுப்படுத்த மற்றும் கூட்டங்களை சிதலாக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை இந்த போராட்டங்களில் குழந்தைகள் உட்பட 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில், தவறான தகவல்களை பரப்புவதாகக் கூறி, இஸ்பஹான் நகரில் உள்ள ஐ.ஆர்.ஐ.பி என்ற அரசின் சொந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடக மைய அலுவலகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டு அழித்துள்ளனர்.