பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் இலக்கை அடைய முடியவில்லை

Date:

பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் இலக்கை அடைய முடியவில்லை

பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் தனது குறிக்கோளைக் கண்டு செல்ல முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இது இந்த புத்தாண்டில் இஸ்ரோவினால் ஏவிய முதல் ராக்கெட்டாகும். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய இ.ஓ.எஸ். என்-1 செயற்கைக்கோள் முதன்மை செயற்கைக்கோளாக ஏவப்பட்டது.

இதோடு, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 17 வணிக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன.

விண்ணில் ஏவப்பட்ட சில நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்தது; இதனால் திட்டம் இலக்கை அடையவில்லை என்று இஸ்ரோ அறிவித்தது.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நாராயணன், பிஎஸ்எல்வி ராக்கெட் நான்கு நிலைகள் கொண்டது; அதில் முதல் இரண்டு நிலைகள் திட எரிபொருளைக் கொண்டவை, பிற இரண்டு நிலைகள் திரவ எரிபொருளைக் கொண்டவை என கூறினார்.

மூன்றாம் நிலை நிறைவடைந்த வரை ராக்கெட் நல்ல முன்னேற்றத்திலிருந்தது. ஆனால் மூன்றாம் நிலை முடிவில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதன் விளைவாக ராக்கெட் திட்டமிட்ட பாதையில் இருந்து விலகி இலக்கை அடைய முடியவில்லை. தற்பொழுது, தரவுகளை ஆராய்வதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈரானின் பதில் தாக்குதல்: “மரண அடி” …. அமெரிக்கத் தளங்கள் பாதிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே...

“திமுகவில் சமூக நீதி இல்லை”: சாதி பாகுபாடு புகார் கூறி புதிய கட்சி தொடங்கிய திமுக நிர்வாகி!

"திமுகவில் சமூக நீதி இல்லை": சாதி பாகுபாடு புகார் கூறி புதிய...

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிப்பு: பீகார் மாநிலத்திலிருந்து போட்டி!

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிப்பு: பீகார்...

ஈரானில் பதற்றம்: வெளிநாட்டு மாணவர்கள் நில எல்லைகள் வழியாக வெளியேற அனுமதி!

ஈரானில் பதற்றம்: வெளிநாட்டு மாணவர்கள் நில எல்லைகள் வழியாக வெளியேற அனுமதி! டெஹ்ரான்: ஈரான்...