குழந்தை ஆபாச உள்ளடக்கம் – மீண்டும் விமர்சன சுழலில் Grok AI : சிறப்பு கட்டுரை

Date:

குழந்தை ஆபாச உள்ளடக்கம் – மீண்டும் விமர்சன சுழலில் Grok AI : சிறப்பு கட்டுரை

குழந்தைகளை அநாகரிகமாக வெளிப்படுத்தும் படங்கள் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை வெளியிட்டதாக, எலான் மஸ்க்கின் Grok AI மீண்டும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான முழு பின்னணியை விளக்கும் செய்தித் தொகுப்பாக இது அமைகிறது.

இன்றைய சூழலில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் வரை, பலரும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகளையே பெரிதும் நம்பி வருகின்றனர்.

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும், உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவருமான எலான் மஸ்க், Gemini AI, ChatGPT, OpenAI போன்ற AI சார்ந்த உரையாடல் கருவிகளுக்கு போட்டியாக Grok AI-யை அறிமுகப்படுத்தினார்.

உலகளவில் 60 கோடிக்கும் அதிகமான பயனர்கள் எக்ஸ் (X) சமூக ஊடக தளத்தில் இணைந்திருப்பதால், Grok AI குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்ற ChatBot ஆக உருவெடுத்தது.

எக்ஸ் தளத்தில் கேள்வியை பதிவிட்டு @Grok என குறிப்பிடும் போது, தனித்துவமான அணுகுமுறையில் உடனடி பதிலை Grok AI வழங்குகிறது. இதன் பல அம்சங்களில், “Unhinged Mode” எனப்படும் வசதி, எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் மிக வெளிப்படையான பதில்களை அளிக்கும் என கூறப்பட்டது.

ஆனால், இந்த அம்சம் அறிமுகமானதுமே, வரம்பு மீறிய, அவதூறான மற்றும் உண்மைக்கு புறம்பான பதில்கள் வழங்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, Grok AI அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை வெளியிடுவதாக மத்திய அரசு கேள்வி எழுப்பி, எக்ஸ் நிறுவனத்திடம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்க அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது. பின்னர் மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மூலம், இந்த விவகாரங்கள் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் Grok AI செயலி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, தற்போது Grok 4.20 என்ற பதிப்பிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. சிக்கலான தரவுகளை கையாளுதல், நிதி ஆய்வு, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பகுப்பாய்வு செய்வது மற்றும் எதிர்கால போக்குகளை கணிப்பது போன்ற அம்சங்களில் Grok 4.20 திறன் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில், சமீபத்திய வாரத்தில் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை Grok AI வெளியிட்டதாக கூறப்பட்டதையடுத்து, மீண்டும் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

பெண் குழந்தைகளை அவமானகரமான முறையில் காட்டும் படங்கள் மற்றும் பதிவுகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என, மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட பலரும் கடும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த xAI நிறுவனம், சட்டவிரோதமான மற்றும் தடைசெய்யப்பட்ட குழந்தை ஆபாச உள்ளடக்கங்கள் இனி வெளிவராத வகையில், கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

எந்த தொழில்நுட்ப அமைப்பும் முழுமையான பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்ய முடியாது என்றும், சேவையின் தரத்தை மேம்படுத்த xAI தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருவதாகவும், பகிரப்பட்ட தகவல்களை ஆய்வு செய்து வருவதாகவும் Grok AI விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் பாரம்பரிய ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புவதாகவும் Grok AI குற்றம் சாட்டியுள்ளது.

இதனிடையே, Grok AI வெளியிட்டதாக கூறப்படும் குறைவான ஆடையுடன் உள்ள குழந்தை படம் ஒன்றை, எலான் மஸ்க் மீண்டும் தனது எக்ஸ் கணக்கில் பகிர்ந்து, அதற்கு சிரித்தும் அழுதும் காட்டும் எமோஜிகளை சேர்த்திருந்தது மேலும் சர்ச்சையை தூண்டியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சமூக ஊடக தளங்கள் தங்கள் தளங்களில் வெளியிடப்படும் பதிவுகள் மற்றும் படங்களை முறையாக கண்காணித்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஏற்கெனவே, போலி செய்திகள், ஆபாச உள்ளடக்கங்கள் மற்றும் சட்டவிரோத பதிவுகளை கட்டுப்படுத்துவதற்காக, எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்த கடுமையான சட்டங்கள் தேவை என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

குழந்தைகளை குறிவைத்து AI மூலம் ஆபாச உள்ளடக்கங்களை உருவாக்கி பரப்புவது, செயற்கை நுண்ணறிவு துறையே எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும் என்று AI தொழில்நுட்ப நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மக்கள் மத்தியில் காணப்படும் ஆதரவு தேர்தல் வாக்குகளாக மாறுமா என்பது உறுதியில்லை… காங்கிரஸ்

மக்கள் மத்தியில் காணப்படும் ஆதரவு தேர்தல் வாக்குகளாக மாறுமா என்பது உறுதியில்லை...

தலையை மறைத்து திமுக அரசுக்கு எதிராக பெண்கள் வித்தியாசமான எதிர்ப்பு போராட்டம்

தலையை மறைத்து திமுக அரசுக்கு எதிராக பெண்கள் வித்தியாசமான எதிர்ப்பு போராட்டம் சிவகங்கை...

கிரிக்கெட் வீரர் அர்ஜூன் டெண்டுல்கருக்கு மார்ச்சில் திருமண ஏற்பாடுகள்?

கிரிக்கெட் வீரர் அர்ஜூன் டெண்டுல்கருக்கு மார்ச்சில் திருமண ஏற்பாடுகள்? இந்திய கிரிக்கெட் உலகின்...

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் விழா – அனுமதி டிக்கெட் கள்ள விற்பனை ரூ.11,000… காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் விழா – அனுமதி டிக்கெட் கள்ள விற்பனை ரூ.11,000…...