ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டம் : மதுரா வந்தடைந்தார் மோகன் பகவத்
ஆர்எஸ்எஸ் அகில இந்திய தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவுக்கு வந்தடைந்தார்.
மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில், ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி 7 நாட்கள் நடைபெறவுள்ள ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இதற்காக மோகன் பகவத் போபாலில் இருந்து ரயில் மூலம் மதுராவை வந்தடைந்தார்.
ரயில் நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் பிருந்தாவன் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மோகன் பகவத் தலைமையில் நடைபெறும் இந்த முக்கிய கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் தேசிய அளவிலான பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.