தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாக நியமனம்
காயம் காரணமாக நீண்ட நாட்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், மீண்டும் மைதானத்துக்கு திரும்பியுள்ளார். வரவிருக்கும் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், அவர் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரிஷப் பந்த், கடந்த ஜூலை மாதம் மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் காயமடைந்தார். அதன் காரணமாக, அவர் ஆசியக் கோப்பை டி20 தொடர் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியவில்லை.
தற்போது முழுமையாக குணமடைந்துள்ள அவர், இந்தியா ‘ஏ’ அணியின் தலைவராக மீண்டும் ஆட்டத்தில் கலக்கவுள்ளார். இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 30-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெறும். இரண்டாவது டெஸ்ட் நவம்பர் 6-ஆம் தேதி அதே மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த தொடர், நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ள இந்தியா–தென் ஆப்பிரிக்கா பிரதான டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔹 முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணி:
ரிஷப் பந்த் (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, நாராயண் ஜெகதீசன், சாய் சுதர்சன், ஆயுஷ் பதோனி, தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதார், அன்ஷுல் கம்போஜ், யாஷ் தாக்கூர், சரன்ஷ் ஜெயின், குர்னூர் பிரார், கலீல் அகமது.
🔹 இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணி:
ரிஷப் பந்த் (கேப்டன்), கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதார், கலீல் அகமது, குர்னூர் பிரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.