மகரவிளக்கு வழிபாடு முன்னிட்டு சபரிமலையில் மத்திய விரைவு பாதுகாப்புப் படை முகாம்

Date:

மகரவிளக்கு வழிபாடு முன்னிட்டு சபரிமலையில் மத்திய விரைவு பாதுகாப்புப் படை முகாம்

மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளதையடுத்து, சபரிமலைக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்காக வழிநடத்தும் நோக்கில் மத்திய அதிவேக பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில், மகரவிளக்கு சிறப்பு வழிபாடுகளை முன்னிட்டு கடந்த 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. வரும் 14ஆம் தேதி மகரஜோதி திருவிழா நடைபெறவுள்ள நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர்.

மகரஜோதி தினம் நெருங்கும் போது பக்தர்களின் திரளான கூட்டம் ஏற்படும் என்பதால், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை பணிகளை வலுப்படுத்த கோயில் நிர்வாகம் மத்திய அதிவிரைவு படையினரை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சன்னிதானம் அருகே நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில், மத்திய அதிவிரைவு படையின் துணை கமாண்டர் பிஜுராம் பாதுகாப்பு தொடர்பான முக்கிய அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.

மத்திய அதிவிரைவு படையைச் சேர்ந்த 140 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் மரக்கூட்டம் பகுதி, நடைபந்தல் வழித்தடங்கள், திருமுற்றம், சன்னிதானம் முன்பகுதி, பஸ்மக் குளம், அரவணை வழங்கும் கவுன்டர்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கூட்ட மேலாண்மை பணிகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தாமிரபரணி நதி மீட்புக்கு ஆக்கிரமிப்பும் மாசுபாடும் ஊழலும் பெரும் தடையாக உள்ளன – ராஜேந்திர சிங்

தாமிரபரணி நதி மீட்புக்கு ஆக்கிரமிப்பும் மாசுபாடும் ஊழலும் பெரும் தடையாக உள்ளன...

ஜப்பானை முந்தி உலகின் 4-வது பெரிய பொருளாதாரம் : இந்தியாவை பாராட்டிய சீனா

ஜப்பானை முந்தி உலகின் 4-வது பெரிய பொருளாதாரம் : இந்தியாவை பாராட்டிய...

ஜல்லிக்கட்டு போட்டிகள் : தீவிரமாக நடைபெறும் காளைகள் தயாரிப்பு பணிகள்

ஜல்லிக்கட்டு போட்டிகள் : தீவிரமாக நடைபெறும் காளைகள் தயாரிப்பு பணிகள் பொங்கல் திருநாளை...

உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்! மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்...