திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

Date:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா இன்று காப்பு கட்டுதல் நிகழ்வுடன் சிறப்பாக ஆரம்பமானது. விழாவின் தொடக்க நாளான இன்று, பல பக்தர்கள் திரளாக வந்து காப்புக்கட்டு விழாவில் கலந்து கொண்டு விரதத்தை மேற்கொண்டனர்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாக விளங்கும் இந்தத் திருப்பரங்குன்றம் கோயிலில், அக்டோபர் 22 முதல் 28 வரை கந்த சஷ்டி திருவிழா நடைபெறுகிறது. இன்று காலையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கலியாண சமேத சுவாமிக்கு முதலில் காப்பு கட்டப்பட்டது.

பின்பு உற்சவர் சுவாமி மற்றும் தெய்வானைக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, விரதமிருக்கும் பக்தர்களுக்கு சிவாசாரியார்கள் காப்பு கட்டி அருள்புரிந்தனர். திருவிழா நாட்களில் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வது வழக்கம்.

விரதமிருப்போருக்கு தினமும் உச்சிகால பூஜைக்குப் பின் தேன், சர்க்கரை கலந்த தினை மாவு, மாலையில் எலுமிச்சம் பழச்சாறு, இரவில் பால் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

அதேபோல், தினமும் இரவு 7 மணியளவில் சப்பரத்தில் விடையாத்தி சுவாமி எழுந்தருளி கோயிலின் திருவாட்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மேலும், காலை 8.30க்கு யாகசாலை பூஜை, காலை 11 மணிக்கும் மாலை 5 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.

முக்கிய நிகழ்வுகளில் அக்டோபர் 26 அன்று சக்திவேல் வாங்குதல், 27 அன்று சூரசம்ஹாரம், 28 அன்று சட்டத் தேரில் எழுந்தருளல், அதே மாலை பாவாடை தரிசனம் நடைபெறும்.

இந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பி. சத்யபிரியா மற்றும் துணை ஆணையர் ந. யக்ஞநாராயணன் தலைமையில், அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்களால் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷேன் நிகாமின் ‘ஹால்’ படம் சர்ச்சையில்: அக்டோபர் 25 அன்று நீதிபதி நேரில் படம் பார்வை

ஷேன் நிகாமின் ‘ஹால்’ படம் சர்ச்சையில்: அக்டோபர் 25 அன்று நீதிபதி...

அமெரிக்கா விரைவில் இந்தியப் பொருட்களுக்கான வரியை 15–16% ஆகக் குறைக்கும்: இரு நாடுகளும் ஒப்பந்தத்துக்கு நெருக்கம்

அமெரிக்கா விரைவில் இந்தியப் பொருட்களுக்கான வரியை 15–16% ஆகக் குறைக்கும்: இரு...

நெல் கொள்முதல் செயல்பாட்டில் தமிழக அரசு முற்றிலும் தோல்வியடைந்தது – பழனிசாமி கடும் குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் செயல்பாட்டில் தமிழக அரசு முற்றிலும் தோல்வியடைந்தது – பழனிசாமி...

பாஜகவுக்கு எதிராக பாயும் பிரசாந்த் கிஷோர் – பிஹார் தேர்தலில் ‘அச்சுறுத்தல்’ அரசியலா?

பாஜகவுக்கு எதிராக பாயும் பிரசாந்த் கிஷோர் – பிஹார் தேர்தலில் ‘அச்சுறுத்தல்’...