ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை தொடக்கம் – ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்
சென்னை கிண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT-M) வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டு ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்கள் நடைபெற உள்ள “சாஸ்த்ரா” மற்றும் “சாரங்” எனும் கல்வி மற்றும் கலாச்சார விழாக்களையும் அவர் தொடக்கி வைத்தார். மேலும், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, கல்வி–தொழில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, மலேசியா, ஜெர்மனி, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களுடன் ஐஐடிஎம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவை ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.