இனி ஒரு நாள் 25 மணிநேரம்? – விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு தகவல்

Date:

இனி ஒரு நாள் 25 மணிநேரம்? – விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு தகவல்

சமீப கால ஆய்வுகளின் அடிப்படையில், பூமி தன்னுடைய சுழற்சி இயக்கத்தை மெதுவாக்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எதிர்காலத்தில் நாளின் கால அளவில் பெரிய மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. அந்த மாற்றம் என்ன, அது எப்போது நிகழும் என்பதைக் குறித்து இந்த செய்தி விளக்கமாக எடுத்துரைக்கிறது.

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், தினசரி செய்ய வேண்டிய பணிகள் அதிகரித்து விட்டன. இதன் காரணமாக, 24 மணிநேரம் கொண்ட ஒரு நாள் போதவில்லை என்ற எண்ணம் பலரிடமும் தோன்றியிருக்கும். “ஒரு நாளில் இன்னும் ஒரு மணிநேரம் கூடுதலாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று நினைப்பவர்களும் ஏராளம்.

அந்த எண்ணத்துக்கு இணங்க, விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வருங்காலத்தில், ஒரு நாளின் நீளம் அதிகரித்து, 24 மணிநேரத்திலிருந்து 25 மணிநேரமாக மாற வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை புரிந்துகொள்ளும் முன், “ஒரு நாள்” என்ற கால அளவு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றி முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரமே 24 மணிநேரம் என பலர் கருதுகின்றனர். ஆனால், அது ஒரு எளிய விளக்கம் மட்டுமே.

உண்மையில், நாளின் நீளம் பல்வேறு அறிவியல் கணக்குகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, வானில் உள்ள நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் நாளை “நட்சத்திர நாள்” என்று அழைக்கிறார்கள். இதில், பூமி 360 டிகிரி சுழன்று மீண்டும் அதே நிலைக்கு திரும்புவதற்கு சுமார் 23 மணிநேரம் 56 நிமிடங்கள் 4 விநாடிகள் ஆகும்.

மற்றொரு வகையில், சூரியனை அடிப்படையாகக் கொண்டு நாளின் காலம் கணக்கிடப்படுகிறது. ஒரு நாளின் மதியத்திலிருந்து அடுத்த நாளின் மதியம் வரையிலான நேரமே “சூரிய நாள்” ஆகும். இந்த நேர அளவு வருடம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது.

உதாரணத்திற்கு, ஜூலை மாதத்தில் ஒரு சூரிய நாள் சுமார் 23 மணிநேரம் 59 நிமிடங்களாகவும், டிசம்பர் மாதத்தில் 24 மணிநேரம் 30 விநாடிகளாகவும் இருக்கும். இவ்வாறு மாறிக்கொண்டே இருக்கும் இந்த நேரத்தின் சராசரியே நாம் பயன்படுத்தும் 24 மணிநேர நாள் ஆகும்.

இந்த சராசரி நாளின் நீளமே, எதிர்காலத்தில் 25 மணிநேரமாக நீளலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பூமியின் சுழற்சியை லேசர் தொழில்நுட்பம், ரேடியோ அலைகள் உள்ளிட்ட உயர் துல்லிய கருவிகள் மூலம் ஆய்வு செய்தபோது இந்த மாற்றம் கண்டறியப்பட்டது.

இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நிலவின் ஈர்ப்பு சக்தி. நிலவின் ஈர்ப்பால் கடல்களில் அலைச்சல்கள் உருவாகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த அலை இயக்கம் பூமியின் மேற்பரப்பில் உராய்வை ஏற்படுத்தி, அதன் சுழற்சி வேகத்தை மெதுவாக்குகிறது என விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.

மேலும், பூமியின் மேற்பரப்பில் நடைபெறும் இயற்கை மாற்றங்களும் இந்த சுழற்சியை பாதிக்கின்றன. கடந்த 120 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நாசா மேற்கொண்ட ஆய்வில், பனிப்பாறைகள் உருகுதல், நிலத்தடி நீர் அளவு குறைதல், கடல் மட்ட உயர்வு போன்ற மாற்றங்கள் வேகமாக நடைபெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து, பூமியின் சுழல் அச்சில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த காரணங்களின் கூட்டுத் தாக்கத்தால், பூமியின் சுழற்சி வேகம் குறைந்து, ஒரு நாளின் நீளம் 24 மணிநேரத்திலிருந்து 25 மணிநேரமாக மாறக்கூடும் என ஆய்வு கூறுகிறது.

ஆனால், இந்த மாற்றம் உடனடியாக நடைபெறப்போவதில்லை. 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்க முடியாது. இந்த மாற்றம் நிகழ்வதற்கு பல மில்லியன் ஆண்டுகள் தேவைப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சமாக 200 மில்லியன் ஆண்டுகள், அதாவது சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதுவரை, நாம் அறிந்திருக்கும் போலவே ஒரு நாள் 24 மணிநேரம்தான். அந்த நேரத்துக்குள் நமது வேலைகள், பொறுப்புகள் அனைத்தையும் செய்து முடிப்பதைத் தவிர, வேறு வழியில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“ஓ.பன்னீர்செல்வம் திமுகவில்: அரசியல் திருப்பமா? அதிகாரப் பரவலா?” விரிவான தகவல்

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில்: அரசியல் திருப்பமா? அதிகாரப் பரவலா? பிப்ரவரி 27, 2026 -...

செயல்பாட்டில் இல்லாத சேவை மையங்கள்: வீடியோ வெளியிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திமுகவினர் மிரட்டல்!

செயல்பாட்டில் இல்லாத சேவை மையங்கள்: வீடியோ வெளியிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திமுகவினர் மிரட்டல்! கடலூர்...

“1500 ஆண்டுகள் பழமையான கோயிலைப் புறக்கணிப்பதா?” – அறநிலையத் துறைக்கு எதிராக இந்து முன்னணி போர்க்கொடி!

"1500 ஆண்டுகள் பழமையான கோயிலைப் புறக்கணிப்பதா?" - அறநிலையத் துறைக்கு எதிராக...

வரலாறு படைத்த குடியரசுத் தலைவர்: உள்நாட்டு ‘பிரசந்த்’ போர் ஹெலிகாப்டரில் திரெளபதி முர்மு பயணம்!

வரலாறு படைத்த குடியரசுத் தலைவர்: உள்நாட்டு 'பிரசந்த்' போர் ஹெலிகாப்டரில் திரெளபதி...