தியானம் உலகமெங்கும் இணைக்கும் பொதுவான மனப் பயிற்சி

Date:

தியானம் உலகமெங்கும் இணைக்கும் பொதுவான மனப் பயிற்சி

தியானம் என்பது மனிதர்களுக்கு உள்ளார்ந்த அமைதி, சிந்தனைத் தெளிவு மற்றும் மன உறுதிப்பாட்டை அளிக்கும் ஒரு சக்திவாய்ந்த வழிமுறை என குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21ஆம் தேதி “சர்வதேச தியான தினம்” ஆகக் கடைப்பிடிக்கப்படும் என, கடந்த 2024ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு இரண்டாவது முறையாக உலகம் முழுவதும் சர்வதேச தியான தினம் அனுசரிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச தியான நிகழ்ச்சியை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், தியானம் என்பது எந்த ஒரு நாட்டுக்கோ, மதத்துக்கோ, பண்பாட்டுக்கோ மட்டும் உரியதாக இல்லாமல், எல்லைகளைத் தாண்டி மனிதகுலம் முழுவதையும் இணைக்கும் உலகளாவிய பயிற்சி எனக் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவில் தியான மரபு தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு, அடுத்த தலைமுறைகளுக்கு பரிமாறப்பட்டு வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

எப்ஸ்டீன் வழக்கு: “ட்ரம்ப்புடன் பழகிய காலம் சிறந்தது” – விசாரணைக் குழுவில் பில் கிளிண்டன் சாட்சியம்!

எப்ஸ்டீன் வழக்கு: "ட்ரம்ப்புடன் பழகிய காலம் சிறந்தது" - விசாரணைக் குழுவில்...

சேலம் பால் மார்க்கெட் விவகாரம்: “பராமரிப்பு என்ற பெயரில் ஆக்கிரமிப்பா?” – திமுக அரசுக்கு எதிராக வியாபாரிகள் போர்க்கொடி!

சேலம் பால் மார்க்கெட் விவகாரம்: "பராமரிப்பு என்ற பெயரில் ஆக்கிரமிப்பா?" -...

“பொம்மை முதலமைச்சர்; வெற்றுப் பெருமை” – சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

"பொம்மை முதலமைச்சர்; வெற்றுப் பெருமை" - சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடி...

குளித்தலை குவாரி விவகாரம்: செய்தியாளர் தாக்குதல் வழக்கில் சிபிஐ விசாரணை? – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கெடு!

குளித்தலை குவாரி விவகாரம்: செய்தியாளர் தாக்குதல் வழக்கில் சிபிஐ விசாரணை? -...