தியானம் உலகமெங்கும் இணைக்கும் பொதுவான மனப் பயிற்சி

Date:

தியானம் உலகமெங்கும் இணைக்கும் பொதுவான மனப் பயிற்சி

தியானம் என்பது மனிதர்களுக்கு உள்ளார்ந்த அமைதி, சிந்தனைத் தெளிவு மற்றும் மன உறுதிப்பாட்டை அளிக்கும் ஒரு சக்திவாய்ந்த வழிமுறை என குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21ஆம் தேதி “சர்வதேச தியான தினம்” ஆகக் கடைப்பிடிக்கப்படும் என, கடந்த 2024ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு இரண்டாவது முறையாக உலகம் முழுவதும் சர்வதேச தியான தினம் அனுசரிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச தியான நிகழ்ச்சியை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், தியானம் என்பது எந்த ஒரு நாட்டுக்கோ, மதத்துக்கோ, பண்பாட்டுக்கோ மட்டும் உரியதாக இல்லாமல், எல்லைகளைத் தாண்டி மனிதகுலம் முழுவதையும் இணைக்கும் உலகளாவிய பயிற்சி எனக் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவில் தியான மரபு தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு, அடுத்த தலைமுறைகளுக்கு பரிமாறப்பட்டு வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஒருமைப்பாட்டை அடைவதே உண்மையான சுதந்திரத்தின் அர்த்தம் – ஆளுநர் ஆர்.என். ரவி

ஒருமைப்பாட்டை அடைவதே உண்மையான சுதந்திரத்தின் அர்த்தம் – ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு...

ரேப் இசைக்கு மனிதர்களைப் போலவே அசத்திய நடன ரோபோக்கள்!

ரேப் இசைக்கு மனிதர்களைப் போலவே அசத்திய நடன ரோபோக்கள்! சீனாவில் நடைபெற்ற இசை...

போலீஸ் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கொடிகம்பம் – மக்கள் கடும் எதிர்ப்பு

போலீஸ் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கொடிகம்பம் –...

மதச்சார்பின்மை பெயரில் திமுக ஆட்சியின் இரட்டை நிலைப்பாட்டுக்கான காலம் தொடங்கியுள்ளது – நயினார் நாகேந்திரன்

மதச்சார்பின்மை பெயரில் திமுக ஆட்சியின் இரட்டை நிலைப்பாட்டுக்கான காலம் தொடங்கியுள்ளது –...