ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் : வைகுண்ட ஏகாதசி 2ஆம் நாள் விழா கோலாகலம்

Date:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் : வைகுண்ட ஏகாதசி 2ஆம் நாள் விழா கோலாகலம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில், மார்கழி மாதத்தை ஒட்டி நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் மிகுந்த பக்தி உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றன.

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாக விளங்கும் இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கமாகும். அவற்றில், மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிக முக்கியத்துவம் பெற்றதாகும்.

இந்த திருவிழா பகல்பத்து, ராப்பத்து மற்றும் இயற்பா ஆகிய மூன்று கட்டங்களாக மொத்தம் 21 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.

இரண்டாவது நாள் நிகழ்வின் போது, நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் தங்கக் கிளி, முத்துச் சாய் கொண்டை, வைர அபயஹஸ்தம், பவள மாலை உள்ளிட்ட அபூர்வ அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வங்கதேசத்தில் தீவிரமடையும் கலவரம் – நாடாளுமன்றம் நோக்கி முன்னேறிய போராட்டக்காரர்கள்

வங்கதேசத்தில் தீவிரமடையும் கலவரம் – நாடாளுமன்றம் நோக்கி முன்னேறிய போராட்டக்காரர்கள் வங்கதேசத்தில் தொடர்ச்சியாக...

திருப்பரங்குன்றம் : செய்தி திரட்ட சென்ற செய்தியாளர் மீது காவல் துறை அத்து மீறல் – பரபரப்பு

திருப்பரங்குன்றம் : செய்தி திரட்ட சென்ற செய்தியாளர் மீது காவல் துறை...

இந்துப் பண்டிகைகளுக்கு முதல்வரின் வாழ்த்து எங்கே? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

இந்துப் பண்டிகைகளுக்கு முதல்வரின் வாழ்த்து எங்கே? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி பாஜகவை...

இந்தியாவுக்கு எதிரான சதியில் ஈடுபடுவோருடன் ராகுல் காந்தி தொடர்பு – பாஜக குற்றச்சாட்டு

இந்தியாவுக்கு எதிரான சதியில் ஈடுபடுவோருடன் ராகுல் காந்தி தொடர்பு – பாஜக...