ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 15 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Date:

ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 15 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில், ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டு தலைவர் உட்பட 15 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள சரண்டா காடுகளில், கிரிபுரு பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இருதரப்புகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த என்கவுன்டரில் 15 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதில், ஜார்க்கண்ட் அரசு ரூ.1 கோடி சன்மானம் அறிவித்திருந்த முக்கிய நக்சலைட்டு தலைவர் பதிராம் மாஞ்சி என்பவரும் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“தமிழகத்தில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?” – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

“தமிழகத்தில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?” –...

நாட்டின் 77-வது குடியரசு தின வாழ்த்துகள்

நாட்டின் 77-வது குடியரசு தின வாழ்த்துகள் நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று...

RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் – அரசியல் வட்டாரங்களில் வாழ்த்துகளும் விமர்சனங்களும்

RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் – அரசியல் வட்டாரங்களில்...

குடியாத்தம் அரசு மருத்துவமனை விவகாரம்: இபிஎஸ் போராட்ட அறிவிப்பு – திமுக திறப்பு தேதி அறிவிப்பு

குடியாத்தம் அரசு மருத்துவமனை விவகாரம்: இபிஎஸ் போராட்ட அறிவிப்பு – திமுக...